நாய்களினால் பல்கலைக்கழகத்திற்கு அச்சுறுத்தல்

673 0

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சூழலில் கட்டாக்காலி நாய்கள் அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் மாத்திரம் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் வீ.அநுரகுமார தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த கட்டாக்காலி நாய்களின் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.