பாகிஸ்தான் பிரஜை கைது

284 0

வீசா இன்றி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 30 வயதான குறித்த நபரை கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்