மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு சாவகச்சேரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் அஞ்சலி

245 0

கொலன்னாவை மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு சாவகச்சேரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மண்டபத்தில் நேற்று மாலை 3 மணிக்கு சமமேளனத் தலைவர் சு.நக்கீரன் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் இளைஞர் சேவைகள் அதிகாரி அ.குனேஸ் இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் த.அருட்கரன் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் உட்பட தென்மராட்சி இளைஞர் கழகங்களைச் சேர்ந்த இளைஞர் யவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டுள்ளது.