ரோஸ் பெர்ணான்டோ இராஜினாமா

236 0

ஐக்கிய தேசியக் கட்சியின் கடான ஆசன அமைப்பாளர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்ணான்டோ, தான் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

இது குறித்த கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடான பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.