வவுனியாவில் புதையல் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கைது

232 0

வவுனியா – பெரியஉலுக்குளம் பகுதியில் புதையல் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் புதையல் தோண்டப் பயன்படுத்திய உபகரணங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் அனுராதபுரம், பொலன்னறுவை, மதவாச்சி மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.