பிபில – மஹியங்கனை வீதியில் முதியவரின் சடலம் கண்டுபிடிப்பு!

21 0

பிபில – மஹியங்கனை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் ஊரணிய 12ஆம் கட்டையை சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (10) இரவு அப்பகுதியில் உள்ள மரண வீடொன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி, ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், சடலமாக மீட்கப்பட்ட நபர் மரண வீட்டில் ஏற்பட்ட கைகலப்பில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ரிதிமாலியத்த பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.