வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

17 0

நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம, வரக்காபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று சனிக்கிழமை (10) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

ஹோமாகம – கொட்டாவ பழைய வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதியான 41 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பேபுஸ்ஸ – அலவ்வ வீதியில் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.