நுரைச்சோலை மின்நிலைய கோளாறுக்கு நிரந்தர தீர்வு காண சீனாவுடன் பேச்சு

247 0

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் முதலாம் இலக்க இயந்திரம் 37 தடவைகள் கோளாறுக்கு உள்ளாகியுள்ளன. இயந்திர கோளாறுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்குடன் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.