வாகன விபத்துக்களில் மூவர் பலி

18 0

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஹோமாகம, மடாட்டுகம மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று (10) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

ஹோமாகம – கொட்டாவ பழைய வீதியின் வளவ சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதியான 41 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – கண்டி வீதியின் பஹல புலாகல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்னால் பயணித்த நபரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிதுல்ஹிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, வரகாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேபுஸ்ஸ – அலவ்வ வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.