குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஒன்பது பேர் மருத்துவமனையில்

226 0
இருவேறு இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் – செனன் மற்றும் வட்டவளை விக்டன் தோட்டங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன், ஏனைய ஆறு பேரும் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.