ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது?

22 0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக வவுனியா மக்களின் கருத்தறிவிக்கான மக்கள் சந்திப்பானது புதிய சாளம்பைக்குளம் பள்ளிவாசல் முன்றலில் இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்றது.

இதன்போது, பொதுமக்களிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பாக மக்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

கட்சியின் பிரதி தவிசாளர் கலாநிதி முத்து முகமதுவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.