ஏ9 வீதியில் முச்சக்கரவண்டி – கெப் வாகனம் மோதி விபத்து ; ஒருவர் பலி ; ஒருவர் காயம்

23 0

அநுராதபுரம், மடாட்டுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ9 வீதியில் புலாகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடாட்டுகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (10) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளையிலிருந்து கெக்கிராவ நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கெக்கிராவையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கித்துல்ஹிட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த அமித் குமார ஜயசிங்க என்ற 29 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய கெப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மடாடுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.