களனி ஆற்றிலிருந்து சடலம் மீட்பு

22 0

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சந்தைக்கு அருகில் களனி ஆற்றில் இருந்து இனந்தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

உயிரிழந்தவர் 5 அடி மற்றும் 6 அங்குல உயரம் கொண்டவர் எனவும்,  45 முதல் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.