கண்டி எசல பெரஹெராவின் முதலாவது பெரஹெரா நிகழ்வு இன்று!

37 0
இந்த ஆண்டுக்கான எசல பெரஹெராவின் முதலாவது பெரஹெரா நிகழ்வு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று சனிக்கிழமை (10) இரவு நடைபெறவுள்ளது.

அதன்படி, இந்த முதலாவது எசல பெரஹெரா எதிர்வரும் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அதன் பின்னர், முதலாவது ரந்தோலி பெரஹெரா நிகழ்வு ஆகஸ்ட் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பின்னர் இறுதி ரந்தோலி பெரஹெரா நிகழ்வு ஆகஸ்ட் 19 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.