சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், கல் விளான் பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (07) இரவு வீசிய கடும் காற்றால் வீட்டின் கூரையொன்று தூக்கி எறியப்பட்டதையடுத்து, மூன்று குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.
மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், இந்த அனர்த்தம் காரணமாக, அவர்கள் சுழிபுரம் திருவடிநிலை சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அசம்பாவிதம் இடம்பெற்ற வீட்டிலிருந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.