சரத் ​​பொன்சேகா பதவி விலகினார்

20 0

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல இதனை தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

மேலும் அதற்கான கட்டுப்பணத்தையும் கடந்த 5 ஆம் திகதி அவர் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது