இரணைமடுக்குள அபிவிருத்தித் திட்டத்தின் வேலை முன்னேற்றக் கலந்துரையாடல்

384 0

iranai_madu_3_CIஇரணைமடுக்குள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்   கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்  திட்டம்  மற்றும் இரணைமடு    அணைக்கட்டு  வேலைத்திட்டம்   ஆகியவற்றின்  வேலை   முன்னேற்றங்கள்   தொடர்பான     கலந்துரையாடல்   இன்று கிளிநொச்சி  மாவட்ட   செயலக   கேப்போர்  கூடத்தில்  நடைபெற்றது

இன்று  பிற்ப்பகல் இரண்டு  முப்பது  மணியளவில்  கிளிநொச்சி  மாவட்ட  அரசாங்க  அதிபர்  சுந்தரம்  அருமைநாயகம்   தலையில்   நடைபெற்ற   இக்  கலந்துரையாடலில் பாராளுமன்ற  உறுப்பினர் சி . சிறிதரன்  கலந்துகொண்டு கருத்துக்களை  தெரிவித்தார்

இக்  கலந்துரையாடலில்   இரணைமடுக்குள கீழ்   கட்டமைப்பு அபிவிருத்திகளான   பாலவேலைகள்  , வடிகாலமைப்பு  மற்றும்  இரணைமடு  அணைக்கட்டு  வேலைத்திட்டம்   ஆகியவற்றின்  வேலை வேகமான  முறையில்  நடைபெற்றுக்  கொண்டிருப்பதாகவும் இப்பொழுது  ஏற்ப்பட்ட   சில  காலநிலை  மாற்றங்களால்   வேளையில்  சிறிய  தாமதம்  ஏற்ப்பட்டு  உள்ளதாகவும் தொடர்ந்தும்    வேகமான   முறையிலே வேலைத்திட்டங்கள் நடைபெறும்   எனவும்  பேசப்பட்டது அத்துடன்  வேலைகள்  முடிவு  பெற்றதும் இரணைமடுக்குள  அணைக்கட்டின்  தோற்றங்கள்  மற்றும் கீழ்   கட்டமைப்பு அபிவிருத்தி  தொடர்பாக விளக்கப்படங்களுடன் இவ்  கலந்துரையாடல்   நடைபெற்றது

இக்  கலந்துரையாடலில்  பாராளுமன்ற  உறுப்பினர் சி . சிறிதரன்  , கிளிநொச்சி  மாவட்ட  அரசாங்க  அதிபர்  சுந்தரம்  அருமைநாயகம், கிளிநொச்சி  மாவட்ட   மேலதிக  அரசாங்க  அதிபர் சத்தியசீலன் ,  கமக்கார  அமைப்புக்களின்  பிரதி  நிதிகள் சம்பந்தப்பட்ட  திணைக்களங்களின்  அதிகாரிகள் ஆகியோர்  கலந்து  கொண்டனர்