மீதெட்டமுல்லை அனர்த்தம் – நிவாரண எல்லையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

239 0

மீதெட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக வழங்கப்படும் நிவாரண எல்லையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட வீடுகளின் உண்மையான பெறுமதியை கண்டறிந்ததன் பின்னர், அதற்கான நிவாரணத் தொகையை வழங்க உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.