யானைகள் மீது துப்பாக்கி பிரயோகம் – வனவளத்துறை அதிகாரி இடமாற்றம்

223 0

வவுனியாவில் கிடங்கு ஒன்றினுள் விழுந்த நான்கு யானைகளை மீட்கும் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வனவளத்துறை அதிகாரி, அனுராதபுரம் வனவள காரியாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

வனவளத்துறை அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது அமைச்சின் விசேட குழு ஒன்று இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நட்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுளளார்.

வவுனியா – ஓமந்தை – கொம்புவைத்த குளம் பகுதியில் கிடங்கொன்றில் வீழ்ந்த யானைகளை மீட்கும் நடவடிக்கை இடம்பெற்ற போது, குறித்த அதிகாரி துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார்.

அதில் ஒரு யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்;தது.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.