பிரித்தானியாவில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

247 0

பிரித்தானியாவில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பில் இன்றையதினம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் 8ஆம் திகதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று, பிரதமர் தெரேசா மேய் அறிவித்திருந்தார்.

2020ஆம் ஆண்டே அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனினும், ஐரோப்பிய ஒன்றிய – பிரித்தானிய விவகாரத்தை அடுத்து, பிரித்தானியாவில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யப்படும் நோக்கில் இந்த முற்கூட்டியத் தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி அங்கு தேர்தல் நடத்த அவருக்கு நாடாளுமன்றத்தில் 3இல் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.