குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக தொழில்நுட்பம் இலங்கையில் இல்லை

255 0

குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக, மேல் மாகாண முதலமைச்ச இசுரு தேவப்பிரிய முன்வைத்த வேலைத்திட்டத்தை அமுலாக்கும் தொழில்நுட்பம் இலங்கையில் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது.

மீதொட்டமுல்லை குப்பை மேடு தொடர்பில் தாம் முன்வைத்த வேலைத்திட்டத்தை நகர அபிவிருத்தி அமைச்சு நிராகரித்ததாக, மேல் மாகாண முதலமைச்சர் குற்றம் சுமத்தி இருந்தார்.

இது தொடர்பில் விளக்கமளித்துள்ள நகர அபிவிருத்தி அமைச்சு, குறித்த வேலைத்திட்டத்தை பாரப்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்த பிரித்தானிய நிறுவனம் ஒன்றிடம் முன்வைக்கப்பட்ட 17 பிரச்சினைகளுக்கு இன்னும் பதில் வழங்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.