போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது – சுமந்திரன்

254 0

வடக்கு கிழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது 3 வாரங்களில் அரசாங்க வெற்றிடங்களை அடையாளம் கண்டு, பட்டதாரிகளை நியமிக்க பிரதமர் உறுதியளித்தார்

தற்போது வெற்றிடங்கள் அடையாளம் காணப்பட்டு, முகாமைத்துவ திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமைச்சரவை அங்கீகாரத்தின் பின்னர் குறித்த வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என்று, எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.