பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்.

225 0

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய ராஜாங்க அமைச்சரான ஆலோக் சர்மா நாளை இலங்கை வருகிறார்.

அவர், எதிர்வரும் 21ஆம் திகதி லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் சிறப்புரை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர்களையும் அவர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பு பொறிமுறை அமுலாக்கத்துக்கு மேலதிக கால அவகாசம் வழங்கும் பிரேரணைக்கு ஆதரவளித்து ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் பிரித்தானியாவின் சார்பில் அவரே கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.