இலங்கையில் தொழிலாளர் உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுகிறது.

250 0

இலங்கையில் தொழிலாளர் உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீண்டும் வழங்குவதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையைத் தேடும் குழுவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சுதந்திர வர்த்தக வலையம் மற்றும் பொதுசேவைப் பணியாளர்கள் மத்தியில் தொழிலாளர் உரிமைகள் மீறப்பட்டு வருகின்றன.

பாலியல் துஸ்பிரயோகங்கள், திடீர் பணிநீக்கம், நெருக்கடி வழங்குவதல் உள்ளிட்ட பல உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் தொழில் உறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையானது, குறிப்பிட்ட சில வர்த்தகர்களுக்கு மாத்திரம் லாபம் தரும் வகையில் அமையக் கூடாது.

அவ்வாறெனின் அந்த சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாதம் தீர்மானிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.