மீதொட்டமுல்ல அனர்த்தம் – பலி 32 – ஜனாதிபதி தலைமையில் முக்கிய கூட்டம்.

251 0

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பல அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது குறித்த அனர்த்தத்தின் பாதிப்புகள் குறித்த கணிப்பீடு முன்வைக்கப்படுவதுடன், மக்களுக்கான நிவாரணம் தொடர்பிலும் தீர்மானிக்கப்படவுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு வேலைத்திட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இடிபாடுகளுக்கு சிக்கி இருப்பவர்களை தேடும் பணிகள் இன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.