மீதொட்டமுல்ல அனர்த்தம் – நாடாளுமன்றத்தில் விசேட விவாதம்

216 0

மீதொட்டமுல்லை அனர்த்தம் தொடர்பில் மகிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்றைக் கோரியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை காணும் நோக்கில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு அனர்த்தத்தை முன்வைத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியை மறைக்க முயற்சிப்பதாக மகிந்த தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.