மீதொட்டமுல்ல குப்பை மேட்டு – அபாய வலையமாக பிரகடனம்

224 0

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அபாய வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

நிறுவகத்தின் மண்சரிவு பிரிவின் பிரதானி ஆர் எம் எஸ் பண்டார இதனை தெரிவித்தார்.

சரிவுக்குள்ளான மீதொடமுல்ல தகம்புர பிரதேசத்தில் இருந்து ஹங்வெல் வரையான 500 மீற்றர், இவ்வாறு அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக அதனை அண்டிய பகுதிகளில் குடியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே குப்பை மேடு தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட ஆராய்ச்சி குழுக்கள் பல குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக பல்கலைகழகத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.