இந்தியாவில் இருந்து 680 கோடி ரூபா பெறுமதியான தொடரூந்துகளை இலங்கைக்கு வழங்கும் ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொடரூந்து திணைக்களத்தை மேற்கொள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இவை சென்னை மற்றும் வாரணாசி ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்பட்டவையாகும்.
குறித்த தொடரூந்துகள் அடுத்த 2 ஆண்டுகளில் தயாரித்து இலங்ககைகு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாகவும் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.