நுகேகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன், நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணித்து வந்த 18 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைதுகள் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.