நுரைசோலை மின்னுற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கியை இன்று மீண்டும் இயக்க ஏற்பாடுகள்

271 0

புனரமைப்பு பணிகளுக்காக இடைநிறுத்தி வைக்கப்பட்ட நுரைசோலை மின்னுற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கியை இன்று மீண்டும் இயக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இதனை தெரிவித்துள்ளார்.
நுரைசோலை மின்னுற்பத்தி நிலையத்தின் தற்போதைய நிலைமைகளை பார்வையிடுவதற்கான அமைச்சர் இன்று அங்கு விஜயம் செய்திருந்த போதே இதனை தெரிவித்தார்.

புனரமைப்பு பணிகளின் நிமிர்த்தம் கடந்த 9ஆம் திகதி குறித்த மின்பிறப்பாக்கி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதேவேளை, நேற்று திடீரென செயலிழந்த நுரைசோலை மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி எதிர்வரும் 2 தினங்களுக்குள் வழமைக்கு திரும்பும் எனவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய குறிப்பிட்டார்.