நிர்மாணப் பணிகள் எதனையும் தமது அனுமதி இன்றி ஆரம்பிக்க வேண்டாம் – ஜனாதிபதி

252 0
கட்டிட நிர்மாணங்களை மாத்திரம் மேற்கொள்ளாது மக்களின் துன்பங்களை நீக்கி அவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இதுவரையில் ஆரம்பிக்கப்படாத நிர்மாணப் பணிகள் எதனையும் தமது அனுமதி இன்றி ஆரம்பிக்க வேண்டாம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை மாத்திரம் முன்னெடுக்குமாறும் தெரிவித்தார்.