நுவரெலியாவில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட ஐவர் கைது

31 0

நுவரெலியா, நோர்வுட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வுட் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை மற்றும் நோர்வுட் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வுப் பணிக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.