கொஸ்கமவில் மருமகனால் தாக்கப்பட்டு மாமனார் கொலை

23 0
கொஸ்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுஅக்கல பகுதியில் மருமகனால் தாக்கப்பட்டு மாமனார் கொலை செய்யப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (26) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

களுஅக்கல பகுதியில் வசிக்கும் 75 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைச்  சமரசம் செய்யச் சென்ற போது மருகனால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவரது சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபரான கொலை செய்யப்பட்டவரது மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.