மக்களின் பிரச்சினைகளில் அக்கறை கொள்ளாத அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும் – வியாழேந்திரன்

285 0

மக்களின் பிரச்சினைகளில் அக்கறை கொள்ளாத அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் இதனை தெரிவித்தார்.

அல்லபடும் மக்களின் அவலங்களில் பங்கு கொண்டு அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுக்க அக்கறை கொள்ளாத அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் ஓரங்கட்டப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கிலே உள்ள சில அரசியல் தலைமைத்துவங்களின் அரசியல் சுயநலப்போக்கு காரணமாகவே மக்களின் காணிகள் இழக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றம் சுமத்தினார்.