காலியில் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு

39 0

திருத்தப்பணிகள் காரணமாக காலியில் சில பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 2.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போபே, பொத்தல, ஹபுகல , ரத்கம மற்றும் பூசா ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.