சிறையிலிருந்து தப்பியோடிய பெண் கைதி ; கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!

32 0

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பெண் சிறை கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வீரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிந்தி ஓயா பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரிந்த போதே குறித்த பெண் சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்தோலை, பொல்கஹத்தன்ன பிரதேசத்தில் வசிக்கும் இந்த  பெண்  ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.