பொலிஸ்மா அதிபர் விடயத்தில் அரசியலமைப்பு பேரவை தலையிட வேண்டும்

24 0

அரசியலமைப்பு பேரவையின் அதிகாரத்தை நீநித்துறை சவாலுக்குட்படுத்த முடியாதென பிரதமர்  தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸ்மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவை வலுவற்றதாக்க அரசியலமைப்பு பேரவை தலையிட வேண்டும்.

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவில் அடிப்படை சட்டவலு கிடையாது என்றும் ஆகவே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாதென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.