கட்டுப்பணத்தை செலுத்தினார் ரணில்

30 0

உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்காக ரணில் விக்கிரமசிங்க  சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால் சி பெரேரா இன்று வெள்ளிக்கிழமை (26) காலை தேர்தல் ஆணைக்குழுவில் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

சுயாதீன வேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் காலை வெளியான நிலையில் முதலாவதாக ரணில் விக்கிரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் முதலாவது வேட்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் சரத் கீர்த்திரத்ன செலுத்தியுள்ளார்.