அ.தி.மு.கவில் இருந்து சசிக்கலாவின் தரப்பினர் ஒதுக்கப்படுவதாக தகவல்

253 0

தமிழ்நாட்டின், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து சசிக்கலாவின் தரப்பினர் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று இரவு கட்சியின் 25 அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் விசேட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

இதன்போது சசிக்கலா, தினகரன் உள்ளிட்டோரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி, கட்சியை ஒன்றிணைப்பதற்காக 10 பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின்படி, பழனிச்சாமி முதலமைச்சராக தொடரும் அதேநேரம், கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பன்னீர்செல்வத்துக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.