யானை மீது துப்பாக்கி சூடு – விசாரணை நடத்த உத்தரவு

258 0

கிடங்கு ஒன்றில் வீழ்ந்திருந்த நான்கு காட்டு யானைகளை மீட்கும் போது வனஜீவராசி அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் யானை ஒன்று பலியான சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் துறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சின் அதிகாரிகள் குழு மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு மேலதிகமாக காவல்துறையினரும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வார்கள் என அமைச்சர் குறிப்பிட்டார்.

வவுனியா – ஓமந்தைப் பகுதியில் உள்ள கொம்புவைத்தகுளத்துக்கு அருகில் உள்ள பாரிய கிடங்கு ஒன்றில் குறித்த நான்கு யானைகளும் சிக்குண்டன.

அவற்றை மீட்ட போது, ஆண் யானை ஒன்று பெக்கோ இயத்திரத்தை தாக்க முற்பட்டதாக தெரிவித்து வனஜீவராசி அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அது உயிரிழந்தது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என வனஜீவராசி துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்த்தேடி வந்த யானைகளே இவ்வாறு குழியில் வீழ்ந்ததாக பொது மக்கள் தெரிவித்தனர்.