படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தல்

63 0

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து இன்றைய தினம் வியாழக்கிழமை (25) மாலை 3.05 மணிக்கு யாழில் நினைவேந்தல் நடைபெற்றது.

‘வெலிக்கடை சிறைப் படுகொலை’ இடம்பெற்ற நாளான இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள ‘தந்தை செல்வா கலையரங்கில்’ நினைவேந்தல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் அரசியல் கைதிகள், சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சமூகத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.