நேபாளத்தில் விமான விபத்து ; 18 பேர் பலி

32 0

நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்படத் தயாரான விமானம் ஒன்று இன்று புதன்கிழமை (24) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலைநகர் காத்மண்டுவில் உள்ள திருபவுன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக விமான நிலையம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட விமானி, அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தின் சவுர்யா விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம், பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

விபத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.