முக்கிய தீர்மானமொன்றை எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை (25) கூடவுள்ளது.
இதேவேளை, இன்னும் ஓரிரு தினங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.