ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர்கள் ஆசிரியர்கள் வலயக்கல்வி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம்

51 0

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட 22 சிங்கள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்க சிரமமான நிலை காணப்படுவதாக தெரிவித்து வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட 22 சிங்கள பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக புதன்கிழமை (24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்களை நியமிக்க கோரியும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் செயல்படக் கோரியும் பதாகைகளை தங்கி இருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரமாக இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.