பரீட்சை நாட்காட்டியை புதுப்பிக்க முடிவு

26 0

பரீட்சைகள் நாட்காட்டியைப் புதுப்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே திட்டமிட்டபடி, நிறைவடைந்துள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வெளியானால் அது சாத்தியமாகும்.

  1. இதேவேளை, உயர்தரம் மற்றும் ஏனைய பரீட்சைகளை அதற்கு முன்னர் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்