நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன காலமானார்

28 0

நவ சமசமாஜ கட்சியின் (Nava Sama Samaja Pakshaya NSSP) தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தனது 81 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருணாரத்ன 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். அவர் இலங்கை அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவர்.

1977 இல், நவசமசமாஜக் கட்சியை (புதிய சமூக சமத்துவக் கட்சி) ஸ்தாபிப்பதற்காக வாசுதேவ நாணயக்கார உட்பட லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) மற்ற முன்னாள் உறுப்பினர்களுடன் இணைந்து கொண்டார். இலங்கையின் அரசியலில் அவரது பங்களிப்புகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.