க.பொ. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் செப்டம்பரில்!

32 0

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப்  செப்டெம்பர் மாதம் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

செய்முறைப் பரீட்சைகள் மற்றும் விடைத்தாள்கள் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மாதங்களுக்குள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.