வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் கைது

38 0

வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கடந்த 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் 9 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவரே இவ்வாறு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இவர் மிகவும் சூட்சுமமான முறையில் சிறைச்சாலையினுள் உள்ள மரமொன்றில் பல மணி நேரமாக மறைந்திருந்து பின்னர் சிறைச்சாலையின் கூரை வழியாக தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் செல்ல முயன்ற கைதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.