தியவன்ன ஓயாவில் ஆணின் சடலம் மீட்பு

33 0
பாராளுமன்றத்துக்கு அருகிலுள்ள தியவன்ன ஓயாவில் மிதந்த நிலையில் இன்று (20) சனிக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்கவர் எனவும், அவர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.