யாழிலிருந்து கதிர்காமம் சென்ற பஸ் திருகோணமலையில் விபத்து

62 0

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்தை நோக்கிச் சென்ற பஸ் திருகோணமலையின் மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கங்கை பாலத்துக்கு அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

 

இந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

 

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.